தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவானவர் கைது

திருநெல்வேலியில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூரணி மடத்தை சேர்ந்த பாலாஜி (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
பாலாஜி நீதிமன்ற விசாரணைக்கு 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை தாழையூத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






