திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி சீனிவாஸ் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
பெங்களூரு,
பெங்களூரு காடுகோடியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 30). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவனிடம் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். பெங்களூரு காடுகோடி பகுதியில் அந்த பெண் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் சீனிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், சீனிவாஸ் அந்த பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், 2 பேரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் சீனிவாஸ் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி அவர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
இதையடுத்து தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை அந்த பெண் சீனிவாசுக்கு கொடுத்துள்ளார். இருப்பினும் சீனிவாசின் தொல்லை அதிகரித்தது. இதையடுத்து அந்த பெண் காடுகோடி போலீசில் சீனிவாஸ் மீது புகார் அளித்தார். அதன்பேரில், காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் சீனிவாசை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.