திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 62 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 8 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 3 மணிநேரமும், டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 35 மணிநேரமும், டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 8 மணியில் இருந்து 10 மணிநேரமும் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






