ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஜகதீப் தன்கர் சந்திப்பு


ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஜகதீப் தன்கர் சந்திப்பு
x

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவை ஜகதீப் தன்கர் சந்தித்தார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைக்கபடங்களை ஜனாதிபதி அலுவலகம் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், "இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story