தொடர்ந்து உல்லாசம்: 23 வயது வாலிபர் மீது.. 40 வயது பெண் புகார்; கோர்ட்டு கருத்து

அந்த பெண்ணை அவ்வப்போது ஜம்முவுக்கு வரவழைத்து வாலிபர் உல்லாசமாக இருந்தார்.
புதுடெல்லி,
ஜம்முவை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர். நொய்டாவை சேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம், அந்த வாலிபர் நொய்டாவுக்கு வந்து அப்பெண்ணை சந்தித்தார்.
பின்னர், விளம்பர படப்பிடிப்புக்காக டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதிக்கு வருமாறு பெண்ணை அழைத்தார். பெண்ணும் சென்றபோது, அவரை ஒதுக்குப்புறத்துக்கு அழைத்துச்சென்று இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தார். பெண்ணை நிர்வாண புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.பின்னர், நிர்வாண புகைப்படத்தை வைத்து மிரட்டி, அந்த பெண்ணை அவ்வப்போது ஜம்முவுக்கு வரவழைத்து, தொடர்ந்து உல்லாசமாக இருந்தார். அவரது தொல்லை பொறுக்க முடியாமல், அந்த பெண், டெல்லி போலீசில் புகார் கொடுத்தார். வாலிபர் மீது போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வாலிபரின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிைலயில், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகிேயார் அடங்கிய அமர்வு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
நீதிபதிகள் கூறியதாவது:-
புகார் கொடுத்த பெண், தானாக முன்வந்து வாலிபருடன் சென்றுள்ளார். பிறகு எப்படி டெல்லி போலீஸ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தது?ஒரு கையை தட்டினால் ஓசை வராது. அந்த பெண், ஒரு குழந்தை அல்ல. 40 வயதான பெண். இருவரும் ஒன்றாக ஜம்முவுக்கு சென்றுள்ளனர். அப்பெண் 7 தடவை ஜம்முவுக்கு சென்றுள்ளார். கணவரும் கவலைப்படவில்லை. பிறகு ஏன் 376-வது பிரிவை (கற்பழிப்பு) பயன்படுத்தினீர்கள்?
அந்த வாலிபர், 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, இது இடைக்கால ஜாமீன் வழங்க பொருத்தமான வழக்கு. வாலிபர், விசாரணை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட வேண்டும். அதை அவர் தவறாக பயன்படுத்தக்கூடாது. அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.