டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2025 7:47 PM IST (Updated: 18 Nov 2025 7:48 PM IST)
t-max-icont-min-icon

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

சென்னை,

மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ) அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இந்நிலையில், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் 625 அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 2025-26ம் ஆண்டில் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான 1,270 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறை/நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் மேலும் உயர்த்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

1 More update

Next Story