ரெயில்வேயில் வேலை.. 312 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
ரெயில்வே துறையில் காலியாக இருக்ககூடிய 312 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:-
பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)
காலி இடங்கள்: 312
பதவி: முதுநிலை விளம்பர ஆய்வாளர், ஆய்வக உதவியாளர் நிலை III (வேதியியலாளர் மற்றும் உலோகவியலாளர்), தலைமை சட்ட உதவியாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர்/ இந்தி, பணியாளர் மற்றும் நல்வாழ்வு ஆய்வாளர், அரசு வழக்கறிஞர், அறிவியல் உதவியாளர் (பயிற்சி) உள்ளிட்ட பணியிடங்கள்
கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித்தகுதி மாறுபடும். 12 ஆம் வகுப்பு, எல்.எல்.பி, எம்.பி.ஏ, முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.
வயது: 29-1-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 33 வயது, 18 முதல் 30 வயது, 18 முதல் 40 வயது, 18 முதல் 38 வயது, 18 முதல் 35 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு, திறனறி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-1-2026
இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/






