உளவுத்துறையில் வேலை: சென்னையிலும் பணியிடம்- பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்


உளவுத்துறையில் வேலை: சென்னையிலும் பணியிடம்- பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்
x

மொத்தம் 4,987 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பின்வருமாறு:

பணியிடங்கள் விவரம்: பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) மொத்தம் 4,987 பணியிடங்கள்

சென்னையில் மட்டும் 285 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை தெரிந்து இருப்பது அவசியம்

சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100 வரை

வயது வரம்பு: 18- வயது முதல் 27-க்குள் இருக்க வேண்டும். 17.8.2025 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.

வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.550. இதர பிரிவினர்கள் ரூ.650 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.8.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க; https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/94478/Index.html

1 More update

Next Story