மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
x

மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றான இதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை,

என்.பி.சி.ஐ.எல் எனப்படும் இந்திய அணுசக்திக் கழகம் இந்தியாவில் மும்பையில் இருந்து செயல்படும் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும்.

பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணு சக்தி துறை கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)

பணி இடங்கள்: 122

பதவி: துணை மானேஜர் (எச்.ஆர்., எப்&ஏ, சி&எம்.எம்., லீகல்), இந்தி மொழிபெயர்ப்பாளர்

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., எம்.பி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு

வயது: 27-11-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மட்டும் 21 முதல் 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-11-2025

இணையதள முகவரி: https://www.npcilcareers.co.in

1 More update

Next Story