பெல் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரத் ஹெவி எல்க்ட்ரிக்கல்ஸ் எனப்படும் பெல் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. திருச்சியிலும் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
பணி நிறுவனம்: பாரத் ஹெவி எலெட்ரிக்கல்ஸ் லிமிட்டெ (பெல்)
காலி இடங்கள்: 515
பதவி: ஆர்ட்டிசியன்
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள்
வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி பொதுப்பிரிவினருக்கு 27 வயது, ஓ.பி.சி. - 30 வயது, எஸ்.சி./எஸ்.டி - 32 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-8-2025
இணையதள முகவரி: https://careers.bhel.in/