சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் வேலை வாய்ப்பு.. ரூ.48,000 சம்பளம்- உடனே விண்ணப்பிங்க


சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் வேலை வாய்ப்பு..  ரூ.48,000 சம்பளம்- உடனே விண்ணப்பிங்க
x

ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: அலுவலக உதவியாளர், பிளம்பர், எலக்ட்ரிஷியன், டைப்பிஸ்ட் என மொத்தம் 04 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி, 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்படியாக 45 வயது வரை இருக்கலாம்.

கல்வி தகுதி: தட்டச்சர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை, ஆங்கிலத்தில் இளநிலை பெற்றிருக்க வேண்டும்.

பிளம்பர் பதவிக்கு அதற்கான ஐடிஐ தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மின்பணியாளர் பதவிக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழை பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: 15,300 - 48,700/- (டைப்பிஸ்ட்)

தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Officer, Arulmigu Adhivyadhihara Bhaktha Anjaneyar Temple, Nanganallur, Chennai – 600061.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2026

முழு விவரங்களுக்கு: https://hrce.tn.gov.in/

1 More update

Next Story