குரூப் 4 தேர்வு: தகுதி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு;
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்07/2025 நாள் 25.04.2025 ல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு.IV (தொகுதி-IV பணிகள் தேர்விற்கான முடிவுகள் தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட (வனக்காப்பாளர். ஓட்டுநர் உரிமத்துட கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் பழங்குடி இளைஞர் பதவிகள் 29.10.2025 நீங்கலாக) தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 29:102026 முதல் 07112025 வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் தெரிவின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு பொதுப் பிரிவினர் மற்றும் அனைத்து இடஒதுக்கீடு பிரிவினர் முறையே 1:3/1:2 என்ற விகிதத்திலும், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர், வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கு அனைத்து பிரிவினர்களும் 1:6 என்ற விகிதத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்”இந்த தகவல்களை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.






