ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நிப்டி 24 ஆயிரத்து 855 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை.
இந்திய பங்குச்சந்தை நிப்டி இன்று (30.07.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 33 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 855 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 71 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 150 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 2 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின்நிப்டி 26 ஆயிரத்து 703 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 143 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 481 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
24 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 9 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 40 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 230 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story