சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
மும்பை.
வாரத்தின் இறுதி நாளான இன்று (11.07.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 188 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 149 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 169 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 787 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 115 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 868 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 689 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 500 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
165 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 45 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 159 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 599 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
Related Tags :
Next Story