தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்தது


தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்தது
x

கோப்புப்படம் 

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

சென்னை

தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந் தேதி ஒரு சவரன் மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 29-ந் தேதி ரூ.76 ஆயிரத்தையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றும் விலை அதிகரித்திருந்தது.

நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.9,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story