சற்று அதிகரித்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் ரூ.122 ஆக உயர்ந்தது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து விறுவிறுவென உயரத் தொடங்கியது. அதன்படி 11-ந்தேதி ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்தையும், 13-ந்தேதி ரூ.74 ஆயிரத்தையும் கடந்தது. அன்றைய தினம் விலைதான் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளும் விலை உயர்ந்து, மேலும் புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் விலை சற்று குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 305-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், பவுனுக்கு ரூ.840-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்தநிலையில், இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து 1 கிராம் ரூ.9,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு கிராம் ரூ.122 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 அதிகரித்து கிராம் ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது.