12,000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பு.. டி.சி.எஸ். சந்தை மதிப்பில் ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு

பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக சரிந்து வருகின்றன.
புதுடெல்லி,
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்., இந்த ஆண்டு 2 சதவீத ஊழியர்களை, அதாவது 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக சரிந்து வருகின்றன. நேற்று மும்பை பங்குச்சந்தையில், டி.சி.எஸ். பங்கு 0.73 சதவீதம் குறைந்து, ரூ.3,056 ஆனது. தேசிய பங்குச்சந்தையில் டி.சி.எஸ். பங்குகள் 0.72 சதவீதம் குறைந்து, ரூ.3,057 ஆக சரிந்தது. இதனால், கடந்த 2 நாட்களில் டி.சி.எஸ். சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரத்து 149 கோடி குறைந்துள்ளது.
Related Tags :
Next Story