சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேற காரணம் என்ன?

சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தாலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது பல சமயங்களில் வெளிப்படையாகத் தெரியும். சில நேரங்களில் ஆய்வகப் பரிசோதனைகளில் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்.
சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது:
1. சிறுநீர்ப்பாதை தொற்று
2. சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி), சிறுநீர்வழி (Urethra) ஆகிய உறுப்புகளில் தொற்று அல்லது அழற்சி
3. சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள்
4. தொண்டையில் ஸ்டெரெப்டோகாக்கஸ் தொற்றை தொடர்ந்து சிறுநீரகத்தில் ஏற்படும் குளோமெருலோநெப்ரைட்டிஸ்
5. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்
6. சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் செய்யப்படும் சில பரிசோதனைகள் - (Catheterisation) சிலாகையேற்றல், (Biopsy) திசு ஆய்வு
7. உட்கொள்ளும் மருந்துகள் (ஆஸ்பிரின், வார்பாரின்)
8. குருதியுறையாமை கோளாறுகள் ( ஹிமோபிலியா, திராம்போசைடோபினியா)
9. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்
10. கடுமையான உடற்பயிற்சி
ஆகையால், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை உதாசீனப்படுத்தாமல், சிறுநீரக சிறப்பு மருத்துவரை கலந்தாலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து, அதற்கு ஏற்ப மருத்துவம் செய்து கொள்ளவேண்டும்.