சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட அப்டேட்!

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 'பராசக்தி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.