சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025
x
Daily Thanthi 2025-11-24 05:10:25.0
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கவாய் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். டெல்லி தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், டெல்லி துணைநிலை கவர்னர், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சுமார் 15 மாதங்கள் அதாவது 2027 பிப்ரவரி 9-ந்தேதி வரை பதவியில் இருப்பார்.

1 More update

Next Story