நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
x
Daily Thanthi 2025-12-01 06:00:50.0
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்துகிறார். மாநிலங்களவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிநடத்த உள்ளார். அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

இதனை முன்னிட்டு, அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

கல்விக்கான நிதியை அதிகரித்து வழங்குவது, நெல்லுக்கான ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும், எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதம் உள்ளிட்ட விவகாரங்களை தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்ப கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

1 More update

Next Story