
2-வது இன்னிங்சிலும் சுருண்ட ஆஸ்திரேலியா... இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது.
இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றும், ஆஸ்திரேலிய அணியினர், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
Related Tags :
Next Story






