அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கொலை வழக்கு; பவாரியா... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025
x
Daily Thanthi 2025-11-24 04:26:48.0
t-max-icont-min-icon

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கொலை வழக்கு; பவாரியா கொள்ளையர்களுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

கடந்த 2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சுதர்சனத்தின் வீட்டிற்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள், அவரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு போலீசார் ராஜஸ்தான், அரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவான நிலையில், 2 பேர் சிறையிலேயே உயிரிழந்தனர்.

தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு கடந்த 21-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அவன்படி இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. தொடர்ந்து, குற்றவாளிகளின் தண்டனை விவரங்களை 24-ந்தேதி(இன்று) கோர்ட்டு அறிவிக்க உள்ளது.

1 More update

Next Story