ஐபிஎல் மினி ஏலம்: 77 வீரர்களை வாங்கிய அணிகள்...அதிக தொகைக்கு போனவர் யார்?


தினத்தந்தி 16 Dec 2025 2:39 PM IST (Updated: 16 Dec 2025 10:26 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று நடைபெற்றது.

அபுதாபி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.மினி ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இதில் முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து வந்த டேவிட் மில்லரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.

இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஏலத்தில் வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் விலகியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோதாவில் குதித்தது. இவரை வாங்க சென்னை - கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ. 25.20 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை (மொத்தம் 77) போட்டி போட்டு வாங்கின. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு எதிர்பார்த்தது போலவே கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

Live Updates

  • 16 Dec 2025 3:07 PM IST

    இந்திய வீரர் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. 

  • 16 Dec 2025 2:48 PM IST

    பிரித்வி ஷா மற்றும் டேவான் கான்வேயை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. 

  • 16 Dec 2025 2:42 PM IST

    ஐ.பி.எல். மினி ஏலம்: முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை.

1 More update

Next Story