பாமக மாநாடு நடைபெறும் பகுதியில் கனமழை - தொண்டர்கள் அவதி

மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் மழையில் நனைந்தனர்.;

Update:2025-08-10 19:22 IST

பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மகளிர் பெருவிழா மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை பூம்புகாரில் பாமக நிறுவனர் தலைமையில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொள்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாமக மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பூம்புகாரில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் மழையில் நனைந்தனர். மாநாட்டிற்கு அமைக்கப்பட்ட கூடாரத்தை மீறி மழைநீர் கொட்டி வருவதால் தொண்டர்கள் நனைந்தவாறு அங்கிருந்து வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்