சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூர் போக்சோ கோர்ட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.;
தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (63 வயது). இவர் கடந்த 2023-ம் ஆண்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்தார்.