சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-07-26 09:01 IST

கோப்புப்படம்


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுகிறது.

அதன்படி, சென்டிரலில் இருந்து இன்று காலை 11.35, மதியம் 1.40, 3.05 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15, மாலை 3.45, 5 மணிக்கு சென்டிரல் வரும் ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.

கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40, 3.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.

இதனால் சென்டிரல்-பொன்னேரிக்கு காலை 11.35, மதியம் 1.40, 3.05 மணிக்கும், பொன்னேரி-சென்டிரலுக்கு மதியம் 1.18, 2.48, 3.33, மாலை 4.3, 5.18 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40, 2.40, 3.45 மணிக்கும், பொன்னேரி-கடற்கரைக்கு மாலை 4.47 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-சென்டிரலுக்கு மதியம் 12.5 மணிக்கும், சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டிக்கு மாலை 4.30 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்