நினைத்ததை முடிக்கும் மகா மாரியம்மன் கோவில் பால் காவடி திருவிழா‌

பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-08-11 13:25 IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நினைத்ததை முடிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 34ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் திருவாவடுதுறை காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் முன் செல்ல பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள், மேளவாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்