திருப்பதியில் 19 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு 19 மணிநேரம் ஆகிறது.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். அதேபோல், நாராயணகிரி தோட்டத்தில் உள்ள 2 செட்டுகளில் பக்தர்கள் நிரம்பினர்.
‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாத இலவச தரிசன பக்தர்களுக்கு 19 மணி நேரம் ஆகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 49 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 930 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 6 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.