மகா சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.;
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில், பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி கோவில், பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், பாண்டமங்கலம், கொந்தளம், சேலூர், பிலிக்கல்பாளையம் ,அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி, மோகனூர், கந்தம்பாளையம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செங்கோட்டை
செங்கோட்டைமற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் மகா சங்கடஹர சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு செக்கடி விநாயகர் கோவிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருப்பது வழக்கம்.
சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆனந்த விநாயகர் கோவில், வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் ஆடி மாத மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகப் பெருமான், கரைப்பாளையம் விநாயகப் பெருமான், நடையனூர், சேமங்கி, மரவாபாளையம், குறுக்குச்சாலை அத்திப்பாளையம், குப்பம், புன்னம் சத்திரம், உப்பு பாளையம் தவுட்டுப்பாளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர், குளத்து பாளையம், குந்தாணி பாளையம், வேட்ட மங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, மூலமங்கலம், புன்னம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.