திருநெல்வேலி: கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் 2 வாலிபர்கள் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீசார் கவனத்திற்கு வந்தது.;
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்னுமணி (வயது 28), சங்கர்நகர், ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் உதயபிரகாஷ்(23) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 2 பேரும் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (12.8.2025) அடைக்கப்பட்டனர்.