மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-07-16 23:52 IST

தூத்துக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (17.7.2025, வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை (17.7.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இனிகோ நகர், ரோச் காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேல சண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர் முடுக்கு காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்பதால் மின் நுகர்வோர்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்பை நல்குமாறு மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்