ஆற்று மணல் திருடிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
முறப்பநாடு பகுதியில் வாலிபர் ஒருவர் லோடு வேனில் ஆற்று மணல் திருடினார்.;
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கடந்த 26.6.2025 அன்று லோடு வேனில் ஆற்று மணல் திருடிய வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த வேல் மகன் பெருமாள் (வயது 25) என்பவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.