திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
தாழையூத்து பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 48) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 ஆண்டாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன கண்ணனை தாழையூத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.