ஆடிக் கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மெமு ரெயில் இயக்கம்

5 நாட்களுக்கு அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-08-13 19:42 IST

ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம்- திருத்தணி இடையே நாளை முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. காலை 10.20 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும். திருத்தணிக்கு 10.40 மணிக்கு சென்றடையும். திருத்தணியில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

மதியம் 1 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 1.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். 1.30 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு, 1.48-க்கு அரக்கோணம் சென்றடையும். மதியம் 2.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 3.10 மணிக்கு திருத்தணியை சென்றடையும். 3.20 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு 3.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

Tags:    

மேலும் செய்திகள்