தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் கடந்த 7.7.2025 அன்று 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரான, தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்த லிங்கசெல்வன் மகன் அஸ்வின் ஜெயக்குமார் (வயது 21) என்பவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்று (9.8.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.