சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 6 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.;

Update:2025-08-12 17:35 IST

சென்னை ,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (13.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (13.08.2025) மணலி மண்டலம், வார்டு-18ல் பாரதியார் தெருவில் உள்ள எஸ்.ஆர்.எஃப். வித்யாலயா பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-35ல் முத்துகுமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123ல் கே.பி.தாசன் சாலையில் உள்ள சமுதாயக் கூடம் ஆகிய 3 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்