19 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.;

Update:2025-08-16 03:35 IST

சென்னை,

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், 19 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்