மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி, கே.வி.அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-08-06 12:45 IST

தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கே.வி.அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (7.8.2025, வியாழக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும்.

அதன்படி மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர் ஹவுசிங்போர்டு, குமரன்நகர் காமராஜ்நகர், டேவிஸ்புரம், சாகிர்உசேன்நகர் சுனாமிநகர் நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், அழகாபுரி, செயின்ட் மேரிஸ்காலனி அய்யர்விளை, கோயில்பிள்ளைவிளை, மாதாநகர், ஆரோக்கியபுரம், மேலஅலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன் பச்சேரி, வாழ்சமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமாவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்