மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி ஊரக கோட்டம், வாகைக்குளம் உபமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-07-17 22:39 IST

தூத்துக்குடி ஊரக கோட்டம், வாகைக்குளம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (18.7.25, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் இடங்களில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திரபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை, அம்மன்கோயில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணிவிலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்