புது வலிமையைப் பெற்றேன் இன்று: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கொளத்தூரில் ரூ.17.65 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.;

Update:2025-08-05 13:32 IST

சென்னை,

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.17.65 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று!

இன்றைய கொளத்தூர் நிகழ்ச்சியில்,

· கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்,

· பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து,

· கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம்,

· பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம்,

· ரெட்டேரியில் ஏ.சி. பேருந்து நிறுத்தம் என, ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்