சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றுவர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.;

Update:2025-07-21 13:05 IST

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் 10-வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மூத்த தலைவர் முத்துகிருஷ்ணன் கொடியேற்றினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழு செயலாளர் இசக்கி ராஜன் வரவேற்று பேசினார். சி.ஐ.டி.யு. அகில இந்திய செயலாளர் கருமலையான் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் வேலை அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார். மாவட்ட பொருளாளர் வலதி பெருமாள் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பீர்முகமது ஷா உள்பட பலர் பேசினார்கள். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அகஸ்தியர் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை ஜி.எஸ்.டி.. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.4 லட்சத்திற்கான வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே திருக்கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்