முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கப்போகிறேன்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கக் கோரிக்கை வைப்பேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-18 20:13 IST

சென்னை:

துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தமிழர்களுக்கு உயர்வு என்று வரும் போது தள்ளி நிற்பது என்பது எந்தவகையில் பொருத்தமாக இருக்கும்? முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கக் கோரிக்கை வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மஹாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.

ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும். இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும். ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.,க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்