குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்துக்குள் புகைபிடித்து வாலிபர் ரகளை
சேக் முகமது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.;
சென்னை,
குவைத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 144 பயணிகளுடன் விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது. தஞ்சாவூர், அதிராம் பட்டினத்தை சேர்ந்த பயணி சேக் முகமது (28) என்பவர் அடிக்கடி தனது. இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் கழிவறைக்கு சென்று புகை பிடித்தார்.
இதனால் அதிர்ச்சிஅடைந்த மற்ற பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள், சேக் முகமதுவை கண்டித்தனர். ஆனால் அவர் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பயணி சேக் முகமதுவை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேக் முகமதுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேக் முகமது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊர்வந்த போது விமானத்தில் புகைபிடித்து போலீசில் சிக்கிக் 'கொண்டார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.