அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (நேற்று) முதல் இணையவழியில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். வருகிற 20-ந்தேதி வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பின்னர், இதற்கான தரவரிசை பட்டியல் இம்மாதம் 25-ந்தேதியன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும். மேலும், எம்.எட். முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.