தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டனர்.;
தஞ்சை,
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகாநந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடந்ததையும், இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.