ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர் ருத்ர அம்சத்தைப் பெறுகிறார்.;

Update:2025-07-23 13:27 IST

சிவன் அருள் இருந்தால்தான், சிவ சின்னமாக விளங்கும் ருத்ராட்சத்தைக்கூட அணிய முடியும் என்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றி, ஸ்ரீமத் தேவி பாகவதம், சிவ மகா புராணம் போன்றவை சில விஷயங்களை சொல்கின்றன.

* எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவரும்கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவார்.

* ருத்ராட்சத்தை அணிபவரும், வழிபடுபவரும், பந்த பாசங்களில் இருந்து விடுபட்டு, தொடர இருக்கும் அனேக கோடி பிறப்புகளில் இருந்து விடுபடுகிறார்.

* ருத்ராட்சம் அணிந்த ஒருவருக்கு உணவும், உடையும் தருபவரும், ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களை கழுவி பூஜிப்பவரும், அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகிறார்.

* நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவர் ருத்ர அம்சத்தைப் பெறுகிறார்.

* ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.

* அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும், விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை, ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

* ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில், அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்