வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.;

Update:2025-07-16 21:11 IST

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகிற 19, 20-ந் தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் நாளை மறுநாள், 19-ம் தேதி தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வார இறுதி நாட்களில் பயணிக்க 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பஸ் இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்