தவெக 2-வது மாநாடு: புதிய தேதியை விஜய் அறிவிப்பார்; புஸ்ஸி ஆனந்த் தகவல்

18 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதிக்குள் ஒரு தேதியை காவல்துறையிடம் கொடுத்துள்ளதாக புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-04 20:41 IST

மதுரை,

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்தார். இதையடுத்து தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து 17-ந்தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ந்தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல்22-ந் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் 25-ந் தேதி நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு 18-ந் தேதியில் இருந்து 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு தேதியில் நடைபெறும். எந்த தேதியில் நடைபெறும் என்பதை தலைவர் விஜய் அறிவிப்பார்" என்று கூறினார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பிறகு  அளித்த பேட்டியில் புஸ்ஸி ஆனந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்