தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய 7 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவுப்பரிசு- எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் வழங்கினார்
காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக பணியாற்றிவரும் காவல் நிலையங்களை தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தேர்வு செய்தார்.;
தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி வடபாகம், ஆறுமுகநேரி மற்றும் கோவில்பட்டி மேற்கு ஆகிய 3 காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.
அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக சிப்காட், தூத்துக்குடி தென்பாகம் மற்றும் ஆறுமுகநேரி ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி தென்பாகம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டன.
மேற்சொன்ன மொத்தம் 7 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைக்காக அதன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் நேற்று (18.7.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.